கிளிநொச்சி விவசாயி ஒருவருக்கு ஜனாதிபதி விருது!
கிளிநொச்சி-செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு ஜனாதிபதி விருது கிடைத்துள்ளது. இதன்படி கிளிநொச்சி செல்வா நகரைச் சேர்ந்த விவசாயி மயில்வாகனம் இராஜகோபால் (வயது-59) என்பவருக்கே தேசிய ரீதியில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. விருதுடன், சான்றிதழ் பெற்ற இவருக்கு நான்கு இலட்சம் ரூபா பணமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 2016 இல் தேசிய உணவு உற்பத்தியில் ஆற்றிய சிறந்த பணியினை பாராட்டும் வகையில் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இவ் விருது வழங்கப்பட்டது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed